இளைஞனே வா!
உறக்கத்திலிருக்கும் இளைஞனே எழுந்துவா
போதைப் பொருளை ஒழித்துவிட்டுவா
போதனை ஏற்றிவிடும் அரசியலாரை கழித்து விட்டுவா
தீப்பந்தங்கள் ஏந்தி தீவிரவாதியை சுட்டுவிட்டுவா
தீமையைப் பரப்பும் கயவரை கடலில்
வீசி எறிந்து விட்டு வீறுநடையாய்வா!
சாதிக் கொடுமைகள் பேசும் சாத்தான்களை
சாட்டையடி கொடுத்து விட்டுவா!
காதலாள் கசிந்து உருகும் மனதைக்
கட்டுப்படுத்தி விட்டுவா
கனவுகள் காண்! இந்தியா வல்லரசாக! மிக நல்லரசாக!
கைகளை ஒற்றுமைப் படுத்து தேச உயர்வுக்காக
மனதை திடப்படுத்து கோழையாய் வாழ்வதைவிடுத்து
சுதந்திரமாய் சுற்றித்திரியல்ல சுதந்திரம்
தோளை நிமிர்த்து வல்லூறுகளை வீழ்த்த
தோல்வி என்பதே உன் அகராதியில் இல்லை
துன்பப் பாறைகள் தலையில் உருண்டாலும் துவளாதே!
நீ எஃகை விட வலிமையான வைரநெஞ்சன்
சுவர்க்கம் உன் காலடியில் பணியாளாக
வா இளைஞனே வா! உன் பாரதத்தாய்
சண்டையற்ற, சமயமற்ற, தீமையற்ற,
துன்பமற்ற, தோல்வியற்ற, கவலையற்ற
நகைகளை அவள் சூட்டிக்கொள்ள நீ தருவாயா?
தருவாய்! நீ நிச்சயம் தருவாய்!
ஏனெனில் நீ சுவாசிப்பது இந்தியக் காற்று.






