வா இளைஞனே! வா

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Saturday 18 July 2009 10:24 PM

இளைஞனே! நீ நினைப்பது

நடக்கவில்லையா?

கேட்பதெல்லாம் உனக்கு

கிடைக்கவில்லையா?

எண்ணமெல்லாம் உடனே

செயல்படவில்லையா?

சொர்க்கம் உன் காலில்

வரவில்லையா?

சொந்தங்கள் உனைப்

புரிந்து கொள்ளவில்லையா?

சுதந்திரமாய் பறந்து திரிந்து

வாழ முடியவில்லையா?

தீர்வு போதையா? இளைஞனே!

இவர்களெல்லாம் உனை

புரிந்து கொள்ள தேவையில்லை

உன் மீது உனக்கேன்

நம்பிக்கையில்லை இளைஞனே!

உனை நீ நம்பாதபோது – உனை

மற்றவர் எப்படி புரிந்து கொள்வார்கள் இளைஞனே

வாழ வேண்டிய உனக்கு காலம்

நீண்டுள்ளது! கரம் கூப்புகிறாள்

காலத்தாய்! அவள் கைகளில்

தவழ்ந்து விடு! அவள் புகிழன்

உச்சியில் உனை வைத்து

உச்சி முகர்வாள்! நிச்சயம்

போதை உனக்கு பாம்பின் விட(ஷ)ம்

பற்கள் பட்டதும் பலனின்றி இறப்பாய்

போதை உன் பாதையை மறைக்கும் – அதை

காலால் இடறிவிட்டு

களிப்புடன் நடந்துசெல்

கால்களில் கனிந்துவிட்டது காலம்

சாதிக்கப் பிறந்தவன் நீ

சாதிப் போதையிலும் விழாதே

சவுக்காலடித்து பறந்து செல்

வானம் விரிந்து கிடக்கு – இந்தபூமி

மிக பறந்து கிடக்கு – உனக்காக!

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

பெண்

Posted by Kaviulagam | சமுதாயம், பொதுகவிதை | Friday 17 July 2009 10:22 PM

பெண்ணே நீயே பூமி – நீ

இல்லா வாழ்வைக் காமி

பெண்ணே நீயே புனல் – நீ

இன்றி ஏது மற்றவர்க்கு புகழ்

பெண்ணே நீயே காற்று – நீ

இல்லையேல் ஏது மூச்சு

பெண்ணே நீயே வானம் – நீ

இல்லாவிட்டால் எதுவும் காணோம்

பெண்ணே நீயே அக்னி – நீயே

குளிக்கலாமா அக் – கனியில்

பஞ்ச பூதங்களின் வடிவம் – நீ

பஞ்சமில்லை உன் சாதனை

பட்டியலிட அஞ்சுவதேன்

ஆரணங்கே! நெஞ்சுரம்கொள்!

தப்பாக்கித் தோட்டாக்கள் கூட

தன்னையேச் சுட்டுக் கொள்ளும்

உன் பெருமையை எண்ணி.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

பயமேன்

Posted by Kaviulagam | சமுதாயம், பொதுகவிதை | Thursday 16 July 2009 10:21 PM

வாழ்க்கைப்பாதை மலர்ப் பாதைதான் – நீ

ரோஜாவில் முள்ளை எண்ணாதபோது

வாழ்க்கை ஒருநேர் தார் சாலைதான்

மேடு, பள்ளங்களை நீ சமமாக எண்ணும்போது

வாழ்க்கை ஒரு விளையாட்டுக் களம் தான்

தோல்வி, வெற்றியை நீ பதக்கமாக எண்ணும்போது

வாழ்க்கை ஒரு நாள் பொழுதுதான் – நீ

இரவு, பகல் எனமாறும் எண்ணும் போதுதான்

வாழ்க்கை ஒரு சுழற்சிதான் – நீ

இன்ப, துன்பங்களை இருகண்களாக எண்ணும் போதுதான்

வாழ்க்கை ஒரு போராட்டம்தான்

விதைப்போல் பூமி பிளந்து வந்தால்

வாழ்க்கை ஒரு வசந்தமலராகும்

என நீ எண்ணும் போதுதான்

உன் மனம் மட்டும் மனம்

வைத்தால் மண் குடிசையும்

மாளிகையாகும் நாடும் உயரும்.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

Page 5 of 11« First...3456710...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!