நம்மால் முடியும்
நீ நானெனில் உதடுகள் ஒட்டாது
நாமெனில் அது பிரியாது
பிரிந்த விரல்கள் ஒருகையாகும்
அது பொருளை எடுக்கும்
பல்வேறு பாதைகளாகும் – ஆனால்
ஒரு ஊரின் வழியாகும்
பஞ்சபூதங்கள் ஐந்து ஆகும் – எனினும்
மக்களுக்கே உதவும்
பலப்பொருட்கள் ஒன்று சேரும்
அது நல்உணவாகும்
மனித மனங்கள் நல்சிந்தனை
செயல்களில் ஒன்று பட்டுவிட்டால்
அது நம்மால் முடியாது
என்று ஒன்று உண்டோ?






