வாழ்க்கைப்பாதை மலர் பாதைதான்
ரோஜாவில் முள்ளை எண்ணாதபோது
வாழ்க்கை ஒருநேர் தார் சாலைதான்
மேடு பள்ளங்களை நீ சமமாக எண்ணும்போது
வாழ்க்கை ஒரு விளையாட்டு களம்தான்
வெற்றி தோல்வியை பதக்கமாக எண்ணும்போது
வாழ்க்கை ஒரு நாள் பொழுதுதான்
இரவு பகலாக மாறுவதற்காக என எண்ணும்போது
வாழ்க்கை ஒரு சுழற்சிதான் இன்ப துன்பங்களை
இருக்கண்ணாக எண்ணும்போது
வாழ்க்கை ஒரு போராட்டம்தான்
விதைபோல் பூமி பிளந்து வந்தால்
வாழ்க்கை வசந்தமலராகும் என
நீ எண்ணும் போதுதான்
உன் மனம் மனது வைத்தால்
மண்குடிசையும் மாளிகையாகும்.






