நூலகம்
நவில்தொறும் நூல் நயம்போல்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
உன்னை உணரவே நூல்கள்
பிறரையும் வாழவைக்க கல்வி கல்
அறிவு தெளியவே அவற்றைக்கல்
வாழ்க்கைப் பயிலவே நூலகம் செல்
நூலை அகத்தில் ஆர்வ, மையால்
எண்ண அச்சில் கோர்க்க
காகிதமான உன்னில்
கருத்துக்கள் தெளிவான
சிந்தனையில் அரங்கேறாதோ
நூலகம் செல் நூலசம் கல்
நவிலும் உன் சொல்
நானிலம் புகழும் கேள்.






