கண்ணம்மா — என் காதலி

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Saturday 31 July 2010 1:00 AM

நாணிக் கண் புதைத்தல்

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை — இவன்

மருவ நிகழ்ந்ததென்று நாணமுற்றதோ?

சின்னஞ் சிறுகுழந்தை யென்றகருத்தோ — இங்கு

செய்யத் தகாதசெய்கை செய்தவருண்டோ?

வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன் — நின்றன்

மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.

என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? — எனக்

கெண்ணப் படுவதில்லை யேடிகண்ணம்மா!

கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? — கன்னங்

கன்றிச் சிவக்கமுத்த மிட்டதில்லையோ?

அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை, — இரண்¢

டாவியுமொன் றாகுமெனக் கொண்டதில்லையோ?

பன்னிப் பலவுரைகள் சொல்லுவதென்னே? — துகில்

பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ?

என்னைப் புறமெனவுங் கருதுவதோ? கண்கள்

இரண்டினில் ஒன்றையொன்று கண்டுவெள்குமோ?

நாட்டினிற் பெண்களுக்கு நாயகா¢சொல்லும் — சுவை

நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?

பாட்டுஞ் சுதியுமொன்று கலந்திடுங்கால் — தம்முள்

பன்னி உபசரணை பேசுவதுண்டோ?

நீட்டுங் கதிர்களொடு நிலவுவந்தே — விண்ணை

நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?

மூட்டும் விறகினையச் சோதிகவ்வுங்கால் — அவை

முன்னுப சாரவகை மொழிந்திடுமோ?

சாத்திரக் காரரிடம் கேட்டுவந்திட்டேன்; — அவா¢

சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;

நேற்று முன்னாளில்வந்த உறவன்றடீ; — மிக

நெடும்பண்டைக் காலமுதல் நோ¢ந்துவந்ததாம்.

போற்றுமி ராமனென முன்புதித்தனை, — அங்கு

பொன்மிதிலைக் கரசன் பூமடந்தைநான்;

ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன்

உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான்;

முன்னை மிகப்பழமை இரணியனாம் — எந்தை

மூர்க்கந் தவிர்க்கவந்த நரசிங்கன் நீ,

பின்னையொர் புத்தனென நான்வளர்ந்திட்டேன் — ஒளிப்

பெண்மை அசோதரையென் றுன்னையெய்தினேன்.

சொன்னவர் சாத்திரத்தில் மிகவல்லர்காண்; — அவர்

சொல்லிற் பழுதிருக்கக் காரணமில்லை;

இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; — இதில்

எதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே?

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

கண்ணம்மா — என் காதலி

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Wednesday 28 July 2010 1:00 AM

முகத்திரை களைதல்

தில்லித் துருக்கர்செய்த வழக்கம — பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்துவைத்தல்;

வல்லி யிடையினையும் ஓங்கிமுன்னிற்கும் — இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங்கண்டாய்;

வல்லி யிடையினையும் மார்பிரண்டையும் — துணி

மறைத்தத னாலழகு மறைந்ததில்லை;

சொல்லித் தெரிவதில்லை, மன்மதக்கலை — முகச்

சோதி மறைத்துமொரு காதலிங்குண்டோ?

ஆரியர் முன்னெறிகள் மேன்மையென்கிறாய்? — பண்டை

ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?

ஓரிரு முறைகண்டு பழகியபின் — வெறும்

ஒப்புக்குக் காட்டுவதிந் நாணமென்னடீ?

யாரிருந் தென்னையிங்கு தடுத்திடுவார் — வலு

வாக முகத்திரையை அகற்றிவிட்டால்?

காரிய மில்லையடி வீண்பசப்பிலே — கனி

கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ?

VN:F [1.8.3_1051]
Rating: 9.5/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

கண்ணம்மா — என் காதலி

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Sunday 25 July 2010 1:00 AM

பின்னே வந்து நின்று கண் மறைத்தல்

மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே

வானையும் கடலையும் நோக்கியிருந்தேன்;

மூலைக் கடலினையவ் வானவளையம்

முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல்கண்டேன்;

நீல நெருக்கிடையில் நெஞ்சுசெலுத்தி,

நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே

சாலப் பலபலநற் பகற்கனவில்

தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.

ஆங்கப் பொழுதிலென் பின்புறத்திலே,

ஆள்வந்து நின்றெனது கண்மறைக்கவே,

பாங்கினிற் கையிரண்டுந் தீண்டியறிந்தேன்,

பட்டுடை வீசுகமழ் தன்னிலறிந்தேன்,

ஓங்கி வருமுவகை யூற்றிலறிந்தேன்;

ஒட்டு மிரண்டுளத்தின் தட்டிலறிந்தேன்;

‘வாங்கி விடடிகையை யேடிகண்ணம்மா,

மாய மெவ ரிடத்தில்?’ என்றுமொழிந்தேன்.

சிரித்த ஒலியிலவள் கைவிலக்கியே,

திருமித் தழுவி, “என்ன செய்திசொல்” என்றேன்;

“நொரித்த திரைக்கடலில் என்னகண்டிட்டாய்?

நீல விசும்பினிடை என்னகண்டிட்டாய்?

திரித்த நுரையினிடை என்னகண்டிட்டாய்?

சின்னக் குமிழிகளில் என்னகண்டிட்டாய்?

பி£¤த்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,

பெற்ற நலங்கள் என்ன? பேசுதி” என்றாள்.

“நொரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;

நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;

திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;

சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;

பிரித்துப் பி ரித்துநிதம் மேகம் அளந்தே,

பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை;

சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே,

திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: 0 (from 0 votes)
  • Share/Bookmark

Page 1 of 41234



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!