புல்லறிவாண்மை
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
விளக்கம் : ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக்
கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
விளக்கம் : ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக்
கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்.
விளக்கம் : படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு
உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு
நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க
முடியாது.
இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து.
விளக்கம் : வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில்
ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன்
வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.
| ||
