பெரியாரைத் துணைக்கோடல்
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
விளக்கம் : கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர்
பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை
பயக்கும்.
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
விளக்கம் : கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர்
பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை
பயக்கும்.
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
விளக்கம் : கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக்
கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச்
சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல.
சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு.
விளக்கம் : தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம்
தாழ்த்தாமல் ஈ.டுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள்
வந்து குவிந்துவிடும்.
| ||
