பிறனில் விழையாமை
எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
விளக்கம் : எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய
மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு
ஆளாவான்.
எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
விளக்கம் : எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய
மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு
ஆளாவான்.
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
விளக்கம் : `என்ன தவறு செய்துவிட்டோம்’ என நினைத்துக்
கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால்
அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே
நன்று.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
விளக்கம் : இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று
உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
| ||
