காலமறிதல்
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
விளக்கம் : கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள்
அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று
தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு
வாங்குவதைப் போன்றதாகும்.






