இல்வாழ்க்கை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
விளக்கம் : தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள்
கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று
வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு
இணையாக வைத்து மதிக்கப்படுவான்.






