செங்கோன்மை
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.
விளக்கம் : நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது,
பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான
விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.
விளக்கம் : நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது,
பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான
விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.
விளக்கம் : செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த
பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும்
அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.
பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
விளக்கம் : யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள
பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக்
கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.
| ||
