காவடிச் சிந்து
பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கௌ மாரன் — ஒளிர்
பன்னிரு திண்புயப் பாரன், அடி
பணி சுப்பிர மணியர்க்கருள்
அணி மிக்குயர் தமிழைத்தரு
பக்தர்க் கெளியசிங் காரன் — எழில்
பண்ணு மருணாசலத் தூரன்
பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கௌ மாரன் — ஒளிர்
பன்னிரு திண்புயப் பாரன், அடி
பணி சுப்பிர மணியர்க்கருள்
அணி மிக்குயர் தமிழைத்தரு
பக்தர்க் கெளியசிங் காரன் — எழில்
பண்ணு மருணாசலத் தூரன்
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
விளக்கம் : கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில்
நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப்
பயிருக்கு நீராக இருந்தது.
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
விளக்கம் : கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு
முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன்.
அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர்
தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.
| ||
