நடுவு நிலைமை
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
விளக்கம் : ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு
நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே
பெரியோர்க்கு அழகாகும்
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
விளக்கம் : ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு
நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே
பெரியோர்க்கு அழகாகும்
கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
விளக்கம் : இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த
கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள்
இருப்பதால்தான் பெருமை அடைகிறது.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து.
விளக்கம் : நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல்
ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம்
அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின்
கடமையாகும்.
| ||
