மலர்கள்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Friday 7 May 2010 1:00 AM

மனதை கொள்ளை கொள்ளும் நளினம்

மணத்தோடு மனம் பரவும் குதூகலம்

இனமெனும் பலவகையும் மின்னும்

இளமையெனும் தென்றலில் தவழும்

வாசமற்ற நிறத்தாளும் அசத்தும்

வண்ண எழிலான சூலோடும் சேரும்

கவர்ச்சியான போர்வையோடும் அணைக்கும்

கண்டு மகிழச் செய்யும் பரவசம்

மருந்தாகி புண்ணாற்றும் தாயுள்ளம்

அருவிருத்தாகி அரவணைத்து தாலாட்டும்

விநாடி வாழ்வெனினும் மலர்ந்த முகம்.

VN:F [1.8.3_1051]
Rating: 6.9/10 (8 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +4 (from 4 votes)
  • Share/Bookmark

பிள்ளைகள்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Saturday 1 May 2010 1:00 AM

நீ எனக்குத் தாயாவது

எப்பொழுது – நீ

என்னை குழந்தையாய்

எண்ணும் போது.

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (5 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +5 (from 5 votes)
  • Share/Bookmark

சந்தேகம்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம் | Thursday 29 April 2010 1:00 AM

சந்தோஷக் கேடு

மனம் குறுகியகூடு

நிம்மதியில்லா வீடு

அதில் நீ படும்பாடு

புரிதலுக்கில்லை ஈடு

புரிந்துக் கொள்ள முயற்சியெடு

வாழ்க்கை ஒரு மகிழ்ச்சி ஏடு

உண்மையைத் தேடு

தவறான எண்ணங்களை விடு

திருந்தவில்லையாயின் ஓடு

உலகமே உனக்கு இருண்ட காடு

உணர்ந்தால் மகிழ்ச்சி

எல்லைக்கு ஏது கோடு

உல்லாசமாய் பறந்து பாடு.

VN:F [1.8.3_1051]
Rating: 8.4/10 (5 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +4 (from 4 votes)
  • Share/Bookmark

Page 2 of 5112345102030...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!