மலர்கள்
மனதை கொள்ளை கொள்ளும் நளினம்
மணத்தோடு மனம் பரவும் குதூகலம்
இனமெனும் பலவகையும் மின்னும்
இளமையெனும் தென்றலில் தவழும்
வாசமற்ற நிறத்தாளும் அசத்தும்
வண்ண எழிலான சூலோடும் சேரும்
கவர்ச்சியான போர்வையோடும் அணைக்கும்
கண்டு மகிழச் செய்யும் பரவசம்
மருந்தாகி புண்ணாற்றும் தாயுள்ளம்
அருவிருத்தாகி அரவணைத்து தாலாட்டும்
விநாடி வாழ்வெனினும் மலர்ந்த முகம்.






