காந்திஜி
அண்ணல் போர் பந்தரில் பிறந்து
போரை விரும்பாத தியாகி
கரம்சந்த் காந்திஜி அன்பு கரம்
கொண்டு ஆங்கிலேயனை அடக்கிய யோகி
எலும்புக்கூடு உள்ளத்தில் எம் இந்திய
மக்களை அடைத்த சிறை கைதி
பொக்கை வாய் சிரிப்பில்
பொக்கிஷமான தேசத்தை பொத்திவைத்த
எங்கள் தேசப்பிதா நீங்கள் எப்பொழுது
உயிர்நீத்தீர்கள் உங்கள் இந்திய தேசமட்டுமல்ல
உலகதேசம் உள்ளவரை உங்களுக்கு
இறப்பேது அண்ணலே!






