பாரதம்
வல்லரசாக அதற்குமுன்
நல்லரசாக கருணை
உள்ளரசாக வேண்டாத
கள்ளரசாக மாறத்
தெளிவரசாக அன்பு
கொண்டரசாக குணம்
உண்டரசாக உரிமைக்கு
குரலரசாக உண்மைக்கு
உழைப்பரசாக நேர்மைக்கு
தன்னிகரிலாரசாக கடமைக்கு
உயிர்தருமரசாக கண்ணியம்
குறையாதரசாக கட்டுப்
பாட்டுக்குள்ளரசாக பெண்மைக்கு
மதிப்பளிக்குமரசாக பார்
போற்றும் பாரத அரசாக
ஆள இளைய சமுதாயமே
விழித்திரு! உழைத்திடு!






