கண்ணம்மா — என் காதலி

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Tuesday 3 August 2010 1:00 AM

குறிப்பிடம் தவறியது

தீர்த்தக் கரையினிலே — தெற்கு மூலையில்

செண்பகத் தோட்டத்திலே,

பார்த்திருந் தால்வருவேன் — வெண்ணிலாவிலே

பாங்கியோ டென்றுசொன்னாய்.

வார்த்தை தவறிவிட்டாய் — அடி கண்ணம்மா!

மார்பு துடிக்குதடீ!

பார்த்த விடத்திலெல்லாம் — உன்னைப் போலவே

பாவை தெரியுதடீ!

மேனி கொதிக்குதடீ — தலை சுற்றியே

வேதனை செய்குதடீ!

வானி லிடத்தையெல்லாம் — இந்த வெண்ணிலா

வந்து தழுவுதுபா ர்.

மோனத் திருக்குதடீ — இந்த வையகம்

மூழ்கித் துயிலினிலே

நானொருவன் மட்டிலும் — பிரிவென்பதோர்

நரகத் துழலுவதோ?

கடுமை யுடையதடீ — எந்த நேரமும்

காவலுன் மாளிகையில்;

அடிமை புகுந்தபின்னும் — எண்ணும்போதுநான்

அங்கு வருவதற்கில்லை;

கொடுமை பொறுக்கவில்லை — கட்டுங் காவலும்

கூடிக் கிடக்குதங்கே;

நடுமை யரசியவள் — எதற்காகவோ

நாணிக் குலைந்திடுவாள்.

கூடிப் பிரியாமலே — ஓரிராவெலாம்

கொஞ்சிக் குலவியங்கே

ஆடி விளையாடியே, — உன்றன்மேனியை

ஆயிரங் கோடிமுறை

நாடித் தழுவிமனக் — குறைதீர்ந்துநான்

நல்ல களியெய்தியே

பாடிப் பரவசமாய் — நிற்கவேதவம்

பண்ணிய தில்லையடி!

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (3 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

கண்ணம்மா — என் காதலி

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Saturday 31 July 2010 1:00 AM

நாணிக் கண் புதைத்தல்

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை — இவன்

மருவ நிகழ்ந்ததென்று நாணமுற்றதோ?

சின்னஞ் சிறுகுழந்தை யென்றகருத்தோ — இங்கு

செய்யத் தகாதசெய்கை செய்தவருண்டோ?

வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன் — நின்றன்

மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.

என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? — எனக்

கெண்ணப் படுவதில்லை யேடிகண்ணம்மா!

கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? — கன்னங்

கன்றிச் சிவக்கமுத்த மிட்டதில்லையோ?

அன்னியமாக நம்முள் எண்ணுவதில்லை, — இரண்¢

டாவியுமொன் றாகுமெனக் கொண்டதில்லையோ?

பன்னிப் பலவுரைகள் சொல்லுவதென்னே? — துகில்

பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ?

என்னைப் புறமெனவுங் கருதுவதோ? கண்கள்

இரண்டினில் ஒன்றையொன்று கண்டுவெள்குமோ?

நாட்டினிற் பெண்களுக்கு நாயகா¢சொல்லும் — சுவை

நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?

பாட்டுஞ் சுதியுமொன்று கலந்திடுங்கால் — தம்முள்

பன்னி உபசரணை பேசுவதுண்டோ?

நீட்டுங் கதிர்களொடு நிலவுவந்தே — விண்ணை

நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?

மூட்டும் விறகினையச் சோதிகவ்வுங்கால் — அவை

முன்னுப சாரவகை மொழிந்திடுமோ?

சாத்திரக் காரரிடம் கேட்டுவந்திட்டேன்; — அவா¢

சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;

நேற்று முன்னாளில்வந்த உறவன்றடீ; — மிக

நெடும்பண்டைக் காலமுதல் நோ¢ந்துவந்ததாம்.

போற்றுமி ராமனென முன்புதித்தனை, — அங்கு

பொன்மிதிலைக் கரசன் பூமடந்தைநான்;

ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன் கண்ணன்

உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான்;

முன்னை மிகப்பழமை இரணியனாம் — எந்தை

மூர்க்கந் தவிர்க்கவந்த நரசிங்கன் நீ,

பின்னையொர் புத்தனென நான்வளர்ந்திட்டேன் — ஒளிப்

பெண்மை அசோதரையென் றுன்னையெய்தினேன்.

சொன்னவர் சாத்திரத்தில் மிகவல்லர்காண்; — அவர்

சொல்லிற் பழுதிருக்கக் காரணமில்லை;

இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; — இதில்

எதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே?

VN:F [1.8.3_1051]
Rating: 10.0/10 (1 vote cast)
VN:F [1.8.3_1051]
Rating: +1 (from 1 vote)
  • Share/Bookmark

கண்ணம்மா — என் காதலி

Posted by Kaviulagam | பாரதியார் பாடல்கள் | Wednesday 28 July 2010 1:00 AM

முகத்திரை களைதல்

தில்லித் துருக்கர்செய்த வழக்கம — பெண்கள்

திரையிட்டு முகமலர் மறைத்துவைத்தல்;

வல்லி யிடையினையும் ஓங்கிமுன்னிற்கும் — இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங்கண்டாய்;

வல்லி யிடையினையும் மார்பிரண்டையும் — துணி

மறைத்தத னாலழகு மறைந்ததில்லை;

சொல்லித் தெரிவதில்லை, மன்மதக்கலை — முகச்

சோதி மறைத்துமொரு காதலிங்குண்டோ?

ஆரியர் முன்னெறிகள் மேன்மையென்கிறாய்? — பண்டை

ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?

ஓரிரு முறைகண்டு பழகியபின் — வெறும்

ஒப்புக்குக் காட்டுவதிந் நாணமென்னடீ?

யாரிருந் தென்னையிங்கு தடுத்திடுவார் — வலு

வாக முகத்திரையை அகற்றிவிட்டால்?

காரிய மில்லையடி வீண்பசப்பிலே — கனி

கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ?

VN:F [1.8.3_1051]
Rating: 9.5/10 (2 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

Page 5 of 13« First...3456710...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!