முதுமை

Posted by Kaviulagam | இயற்கை, பொதுகவிதை | Monday 22 March 2010 1:00 AM

இளமையை அசைபோடும் இன்பகீதம்

இனிய பேரக்குழந்தைகளின் இனிய நாதம்

இவ்வுலக அனுபவத்தின் இதமான வேதம்

இன்ப துன்பங்களின் இதமான பாதம்

இருவரும் சுகமாக பரிமாறும் சாதம்

இயலாமை வந்தாலும் இல்லை சோககீதம்

இனிவரும் காலங்களில் முதுமையலை இனிமையாய் மோதும்

இளசுகளை புரிந்து நடந்துக் கொண்டால் போதும்

முதுமையும் ஒரு வசந்தகாலம்.

VN:F [1.8.3_1051]
Rating: 7.7/10 (3 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

ஏமாற்றம்

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Sunday 21 March 2010 1:00 AM

முன்னால் தெரிந்தவர்களாயின்

முடிவு செய்

பின்னால் தெரிபவர்களாயின்

அறிவு கொள்

முன்னால் புரிந்தவர்களாயின்

தெளிவு பெறு

பின்னால் புரிந்தவர்களாயின்

எச்சரிக்கை கொள்

முன்னால் அறிந்தவர்களாயின்

அன்பு செய்

பின்னால் அறிந்தவர்களாயின்

அனுபவம் கொள்.

VN:F [1.8.3_1051]
Rating: 5.8/10 (4 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +2 (from 2 votes)
  • Share/Bookmark

தாய்மை

Posted by Kaviulagam | இயற்கை, சமுதாயம், பொதுகவிதை | Saturday 20 March 2010 1:00 AM

பெண்ணின் பெருமை தாய்மை

தாய்மையின் நன்மை சேய்மை

சகிப்புத்தன்மையின் நுழைவாயில்

சந்ததிகளை காக்கும் கோயில்

தன்னலற்றவள் தாய்

தன்மையாய் பேசும் அவள் வாய்

தவறுகளை கண்டிக்கும் கண்கள்

தன்னோடு அணைக்கும் நெஞ்சம்

தாய்ப்பாலில் குழைப்பாள் அன்பை அது

தருமே தர்ம நியாய தெம்பை.

VN:F [1.8.3_1051]
Rating: 8.3/10 (6 votes cast)
VN:F [1.8.3_1051]
Rating: +3 (from 3 votes)
  • Share/Bookmark

Page 3 of 3512345102030...Last »



free counters
Business Affiliate Programs •  Deals •  Personals •  Advertising •  Shopping
Tamilish Nam Kural - Urakach Sollungal
4தமிழ்மீடியா செய்திகள்
தினமும் உலகை புதிதாய் காணலாம்
Advertising web site free UseAds.com! Submit & add url & exchange text links, increase page rank + improve traffic!