<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress/2.9" -->
<rss version="0.92">
<channel>
	<title>கவியுலகம் &#187; இயற்கை</title>
	<link>http://www.kaviulagam.com</link>
	<description>என் வார்ப்புகள்</description>
	<lastBuildDate>Fri, 30 Dec 2011 19:30:01 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>காலமறிதல்</title>
		<description><![CDATA[பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
விளக்கம் :  பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று 
விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் 
தேர்ந்தெடுக்க வேண்டும்.  
]]></description>
		<link>http://www.kaviulagam.com/2010/12/17/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/</link>
			</item>
	<item>
		<title>மக்கட்பேறு</title>
		<description><![CDATA[குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளா தவர்
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்கதவர்கள்தான் குழலோசை, 
யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்
]]></description>
		<link>http://www.kaviulagam.com/2010/06/17/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%b1%e0%af%81/</link>
			</item>
	<item>
		<title>மகிழ்ச்சி</title>
		<description><![CDATA[இருப்போர் இல்லார்க்களித்தல் மகிழ்ச்சி
குழந்தைகளிடத்தில் அன்பு கொள்ளுதல் மகிழ்ச்சி
பெற்றோரை பேணி காத்தலில் மகிழ்ச்சி
உற்றோரிடம் விட்டுக் கொடுத்தல் மகிழ்ச்சி
நட்பிடம் மனம் விட்டு பேசுதல் மகிழ்ச்சி
நல்ல பழக்கங்களை நாளும் சேர்த்தல் மகிழ்ச்சி
தேசத்தலைவர்களின் வழியில் நடத்தல் மகிழ்ச்சி
தேடித்தேடி இறைவனை காணல் மகிழ்ச்சி
அடுத்தவரை நேசித்தல் அறிய மகிழ்ச்சி
எதிரிகளிடத்தில் நல்ல குணங்களை 
எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி
எல்லோரும் எல்லாம் பெற்றால் மகிழ்ச்சி
மகிழ்ச்சி எல்லோரிடமும் மகிழ்ச்சியாய் வந்து
மகிழ்ச்சி தந்தால் மட்டற்ற மகிழ்ச்சி.
]]></description>
		<link>http://www.kaviulagam.com/2010/05/17/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-4/</link>
			</item>
	<item>
		<title>புதுமை பெண்கள்</title>
		<description><![CDATA[அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு
ஆணாதிக்கம் செலுத்துபவரை தவிர்ப்பதற்கு
இல்லத்தின் தேவைகளை பகிர்வதற்கு 
ஈன்ற தாய்நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்கு
உயர்ந்தநிலை ஒவ்வொன்றிலும் அடைவதற்கு
ஊக்கம் கொண்டு எதையும் செய்வதற்கு
எடுத்த காரியம்யாவிலும் வெற்றி கொள்வதற்கு
ஏணியாய் விண்ணிலும் கால் பதிப்பதற்கு
ஐயமின்றி அனைத்தையும் அறிவதற்கு
ஓவ்வொரு துறையிலும் முதலாவதாய் நிற்பதற்கு
ஓங்கி மங்காது என்றும் புகழ் பெறுவதற்கு
ஓளவையே எடுத்துக்காட்டாய் அக்கல்வி சான்றிற்கு
எஃகு போன்ற மன உறுதி எந்நிலையிலும் மாறாததற்கு
கடுகிலும் இனி நுழைந்து நீ வெளிவருவாய் என்பதற்கு
காலம் தெளிவடைய வைத்திருக்கிறது நமக்கு
தொடர்ந்து நடைபோடு ஈடு இணையில்லை என்றும் உனக்கு.
]]></description>
		<link>http://www.kaviulagam.com/2010/05/13/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
			</item>
	<item>
		<title>கோபம்</title>
		<description><![CDATA[நவரசங்களில் எல்லோரிடமும் நாயகன்
நன்மை என்றுமே தராத பேயவன்
நடக்கும் பின்விளைவுகளை அறியாதவன்
நடந்த பின்பே யோசிக்கும் மடையன்
நாளெல்லாம் நிழலாகித் தொடர்பவன்
நமக்கும், பிறருக்கும் சேரவிடா துருவமவன்
நல்லவனையும், தீயவனாக்கும் கயவன்
நளிந்த பேரை நசுக்கிவிடும் கொடியவன்.
]]></description>
		<link>http://www.kaviulagam.com/2010/05/10/%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-2/</link>
			</item>
	<item>
		<title>மலர்கள்</title>
		<description><![CDATA[மனதை கொள்ளை கொள்ளும் நளினம்
மணத்தோடு மனம் பரவும் குதூகலம்
இனமெனும் பலவகையும் மின்னும்
இளமையெனும் தென்றலில் தவழும்
வாசமற்ற நிறத்தாளும் அசத்தும்
வண்ண எழிலான சூலோடும் சேரும்
கவர்ச்சியான போர்வையோடும் அணைக்கும்
கண்டு மகிழச் செய்யும் பரவசம்
மருந்தாகி புண்ணாற்றும் தாயுள்ளம்
அருவிருத்தாகி அரவணைத்து தாலாட்டும்
விநாடி வாழ்வெனினும் மலர்ந்த முகம்.
]]></description>
		<link>http://www.kaviulagam.com/2010/05/07/%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/</link>
			</item>
	<item>
		<title>தாய்</title>
		<description><![CDATA[நான் உனக்கு சேயாவது
எப்பொழுது &#8211; நீ
என்னை முதுமையில்
சந்திக்கும் போது.
]]></description>
		<link>http://www.kaviulagam.com/2010/05/04/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-2/</link>
			</item>
	<item>
		<title>பிள்ளைகள்</title>
		<description><![CDATA[நீ எனக்குத் தாயாவது
எப்பொழுது &#8211; நீ
என்னை குழந்தையாய்
எண்ணும் போது.
]]></description>
		<link>http://www.kaviulagam.com/2010/05/01/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
			</item>
	<item>
		<title>சந்தேகம்</title>
		<description><![CDATA[சந்தோஷக் கேடு
மனம் குறுகியகூடு
நிம்மதியில்லா வீடு
அதில் நீ படும்பாடு
புரிதலுக்கில்லை ஈடு
புரிந்துக் கொள்ள முயற்சியெடு
வாழ்க்கை ஒரு மகிழ்ச்சி ஏடு
உண்மையைத் தேடு
தவறான எண்ணங்களை விடு
திருந்தவில்லையாயின் ஓடு
உலகமே உனக்கு இருண்ட காடு
உணர்ந்தால் மகிழ்ச்சி
எல்லைக்கு ஏது கோடு
உல்லாசமாய் பறந்து பாடு.
]]></description>
		<link>http://www.kaviulagam.com/2010/04/29/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/</link>
			</item>
	<item>
		<title>எதிர்காலம்</title>
		<description><![CDATA[விழியில் உன் விழியில் 
என் எதிர்காலம் உள்ளது
மொழியில் உன் மொழியில்
என் உயிர் உள்ளது
வழியில் உன் வழியில்
என் கால் சென்றது
பழியில் உன் பழி &#8211; யில்
நான் மணமுடிப்பது
கழியில் உன் கழியில்
நாமிருவர் ஊணுவது.
]]></description>
		<link>http://www.kaviulagam.com/2010/04/25/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-2/</link>
			</item>
</channel>
</rss>

